சட்டத்தரணி ஏ.எம்.லத்தீப் நிந்தவூர் பிரதேச செயலாளராக பதவியேற்கவுள்ளார்

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வரும் இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சட்டத்தரணி ஏ.எம்.லத்தீப் நிந்தவூர் பிரதேச செயலாளராக மிக விரைவில் கடமையேற்கவுள்ளார்.

தற்போது அம்பாறை மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வரும் திரு.லத்தீப் அவர்கள் நிர்வாகத்துறையில் பல விருதுகளை பெற்று தனக்கு கீழ் கடமை புரியும் உத்தியோகத்தர்களுடன் மிகவும் அன்பாக பழகக்கூடியவர் என்பதுடன், இதற்கு முன்னர் இவர் அக்கரைப்பற்று பிரதேச செயலாளராகவும் கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



சட்டத்தரணி ஏ.எம்.லத்தீப் நிந்தவூர் பிரதேச செயலாளராக பதவியேற்கவுள்ளார் சட்டத்தரணி ஏ.எம்.லத்தீப் நிந்தவூர் பிரதேச செயலாளராக பதவியேற்கவுள்ளார் Reviewed by Editor on August 21, 2021 Rating: 5