மாகாணங்களுக்கிடையில் ரயில் சேவைகளைப் பயன்படுத்த அலுவலக அட்டை கட்டாயம்!!


அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகளைப் பயன்படுத்த முடியாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பணிக்குச் செல்வோருக்கான  புகையிரதப் பயணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த ஆவணங்களை எந்த நேரத்திலும் பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


நன்றி - தினக்குரல்

மாகாணங்களுக்கிடையில் ரயில் சேவைகளைப் பயன்படுத்த அலுவலக அட்டை கட்டாயம்!! மாகாணங்களுக்கிடையில் ரயில் சேவைகளைப் பயன்படுத்த அலுவலக அட்டை கட்டாயம்!! Reviewed by Editor on August 11, 2021 Rating: 5