சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டொக்டர் எம்.எம்.அல்-அமீன் றிசாட் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு வியாழக்கிழமை (09) முதல் இடமாற்றம் பெற்று சென்றார்.
சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர் அமீன் றிசாட், சாய்ந்தமருது பிரதேசத்தில் இந்த கொவிட்-19 காலப்பகுதியில் மக்களின் சுகாதாரத்துறையில் அதிகளவான ஆர்வம் காட்டியதுடன் தனது தலைமையின் கீழ் தன்னை முழுமையாக அர்ப்பணித்து ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் முன்மாதிரியாக செயற்பட்டு முழு நேரமும் தன்னை ஊருக்காக அர்ப்பணித்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண் சிகிச்சை பிரிவிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்.
தனது பதவியினை பொறுப்பெடுத்து குறுகிய காலமாக இருந்தாலும் மக்களின் நலன் கருதி தன்னை முழுமையாக செயற்பட்டதும் சிறப்பம்சமாகும் என்றும்,பதவிக் காலம் பொற்காலமாக இருந்ததுடன் எதிர்கலமும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம் என்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.