தமிழ் இளம் ஊடகவியலாளாரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ஞானப்பிரகாஷம் கொரோனா தொற்றினால் இன்று (02) வியாழக்கிழமை காலமானார்.
நேற்று (1) அண்டிஜெண்ட் பரிசோதனையில் கோவிட் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்றைய தினம் வைத்தியசாலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 26 வயதில் உயிரிழந்தார்.
யாழ், கொடிகாமம் போக்கட்டி எனும் அழகிய கிராமத்தில் பிறந்தவராவார்.
" நானும் மாற்றுத்திறனாளி என்பதை உலகிற்கு வெளிக்காட்டி என்னிடம் இருக்கும் ஊடகத்திறமை மூலம் சாதித்து மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்து தன்னம்பிக்கையை கொடுப்பவனாக இருந்து விட்டு மரணித்து விட வேண்டும் என்பதே எனது கனவு" இது அவரின் இறுதியாக வரிகளாகவும் இருந்தது.
கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் ஊடகவியலாளர் பிரகாஷ்
Reviewed by Editor
on
September 02, 2021
Rating: