(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று, பொத்துவில் வீதி, அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் அக்கரைப்பற்று இராணுவ முகாமின் 241ஆவது படைப்பிரிவின் பொறுப்பாளர் அவர்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க கொவிட் -19 அசாதாரண காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கும் முதற்கட்ட நிகழ்வு இன்று (15) புதன்கிழமை சேர் றாஸீக் பரீட் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 241ஆவது இராணுவ படைப்பிரிவின் பொறுப்பாளர், சங்கத்தின் தலைவரும், மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.பதுருதீன், செயலாளர் எஸ்.றஸ்மி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரிசி ஆலை உற்பத்தியாளர் சங்கத்தினால் உலர் உணவு பொதி வழங்கல்
Reviewed by Editor
on
September 15, 2021
Rating: