புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினால், கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஜனாஸாவை எடுத்துச் செல்லும் வாகனம் திங்கட்கிழமை (20) மாலை முதல் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு புத்தளம் பகா பள்ளிவாசலில் சங்கத்தின் உறுப்பினர்கள், புத்தளம் பெரியபள்ளிவாயில் பிரதி தலைவர், புத்தளம் பகா பள்ளிவாசல் தலைவர், ஜனாஸா நலன்புரி சங்க தலைவர் உட்பட உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் எழிமையான முறையில் நடைபெற்றது.
இவ்வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கு உதவி புரிந்த, உள்ளூர், வெளிப்பிரதேச நல்ல உள்ளங்கள், மற்றும் வெளிநாடுகளில் தொழில்புரியும் எமது ஊர் மக்களுக்கும், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், பங்களிப்புச் செய்த குழுவினருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்கள்.
புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினால், எதிர்வரும் காலங்களில் பல சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளன, அதற்காக, உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாகனம், புத்தளம் நகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடும் போது இலவசமாகவும், தூர இடங்களுக்குச் சேவையில் ஈடுபடும்போது நியாயமான கட்டண முறையிலும் சேவையினை வழங்கும். (வாகனப் பராமரிப்பு மற்றும் தாபன செலவிற்காகவே இக்கட்டணம்)
இந்த வாகனம் தொடர்பில் மேலதிக தகவல்களை அவ்வூர் மக்கள் பெற்றுக் கொள்ள கீழ் குறிப்பிடும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு நிர்வாக சபை கேட்டுள்ளது.
071 444 3773
071 940 4432