நகர சபையின் முகாமைத்துவ உதவியாளர் கொரோனாவினால் உயிரிழப்பு

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

மட்டக்களப்பில் பிரபல பிரத்தியேக வகுப்பு ஆசிரியரும், காத்தான்குடி நகர சபையின் முகாமைத்துவ உதவியாளருமான ஆரியநந்தா கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 07.09.2021ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல பிரத்தியேக தமிழ் ஆசிரியரான ஆரியநந்தா, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இறுதியாக இவர் காக்தான்குடி நகர சபையில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றியிருந்ததோடு, இதற்கு முன்னர் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



நகர சபையின் முகாமைத்துவ உதவியாளர் கொரோனாவினால் உயிரிழப்பு நகர சபையின் முகாமைத்துவ உதவியாளர் கொரோனாவினால் உயிரிழப்பு Reviewed by Editor on September 08, 2021 Rating: 5