தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தமிழ் மாணவி.

"அன்பேசிவம்” அமைப்பைசேர்ந்த மாணவி சுகுமார்-ரவீனா நோர்வே நாட்டில் உள்ள அக்டர் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று ஆராய்ச்சிக்காக நோர்வே நாட்டிற்கு சென்றுள்ளார்.அக்டர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ள ரவீனா யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி இராசாயன விரிவுரையாளராக கடைமையாற்றியுள்ளார். 

பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் உயர் புள்ளிகளை பெற்று சாதனை புரிந்துள்ளார். பொதுபட்டமளிப்பு விழாவில் மூன்று விஷேட தங்கபதக்கங்களைப் பெற்றுள்ளார் என்பதோடு  இவரது ஆய்வுக்கட்டுரை கடந்த ஆண்டு இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றினால் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தமிழ் மாணவி. தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தமிழ் மாணவி. Reviewed by Editor on September 06, 2021 Rating: 5