அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த உத்தரவாத விலை நீக்கப்பட்டுள்ளது.நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இதற்கமைய அரிசிக்கான ஆகக்கூடிய மொத்த மற்றும் சில்லறை விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை. இலங்கைக்கு ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் போலியான அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பது இதன் நோக்கமாகும். அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த உத்தரவாத விலை நீக்கம்
Reviewed by Editor
on
September 28, 2021
Rating: