(எஸ்.ஜே.புஹாது)
நிந்தவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் தற்போது 130 ரூபாவுக்கு சீனி வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உத்தரவாத விலையான 130 ரூபாவுக்கு சீனியை கொள்வனவு செய்வதற்காக இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் சுகாதார நடைமுறைகளை பேணி வரிசையில் நின்றார்கள்.
இதற்கென கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி அவர்களின் ஏற்பாட்டில் நேற்று நிந்தவூர் ப. நோ. கூட்டுறவு சங்கத்திற்கு 500 கிலோ சீனி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்று (03)முதல் பொதுமக்களுக்கு தலா ஒரு கிலோ வீதம் 130 ரூபா விலையில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீனியை பெற நீண்ட வரிசையில் மக்கள்
Reviewed by Editor
on
September 03, 2021
Rating: