உயரிய சபையில் அசிங்கமாக பேசிய மாநகர சபை உறுப்பினரை வன்மையாக கண்டிக்கிறேன் - ஏ.சி.எம்.நௌபர் தெரிவிப்பு
இன்று வெள்ளிக்கிழமை (03) அக்கரைப்பற்று மாநகர சபை அமர்வின் போது இடர்காலத்தில் உயரிய பணிகளை செய்தவர்களை நாய்கள், காவாலிகள், கழிசரைகள் மற்றும் எனது பகுதிக்குள் வரக்கூடாது என சபை அமர்வில் அசிங்கமாக பேசிய தேசிய காங்கிரஸ் உறுப்பினரை வன்மையாக கண்டிப்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அக்கரைப்பற்று மாநகர சபையின் கெளரவ உறுப்பினர் ஏ.சி.எம்.நௌபர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்த உயரிய பணிகளை செய்யும் உலமாக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை நாம் அவர்களுக்கு சதா நேரமும் கண்ணியமும் மரியாதையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று மாநகர சபை உறுப்பினர் நெளபர் தனது கண்டன செய்தியில் தெரிவித்துள்ளார்.
உயரிய சபையில் அசிங்கமாக பேசிய மாநகர சபை உறுப்பினரை வன்மையாக கண்டிக்கிறேன் - ஏ.சி.எம்.நௌபர் தெரிவிப்பு
Reviewed by Editor
on
September 03, 2021
Rating: