(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளன அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் எதிர்கால செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் எம்.எம்.றுக்சான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும், மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் அவர்கள் கலந்து கொண்டு சம்மேளன உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை வழங்கி வைத்ததோடு அதனை தயாரிப்பதற்குரிய முழு நிதியுதவியையும் வழங்கி வைத்தார்.
எதிர்காலத்தில் அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழகங்கள் சம்மேளனம் தொடர்பான செயற்திட்டங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு அக்கரைப்பற்று பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்பட்டதாக இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் றுக்ஸான் தெரிவித்தார்.