சாதனை வீரர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

டோக்யோவில் நடைபெற்ற பராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இலங்கை திரு நாட்டிற்கு பதக்கங்களை பெற்றுக்கொடுத்த வீரர்களான தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலான் கொடிதுவக்கு நேற்று (07) மாலை 4.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

வருகை தந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் விளையாட்டு அமைச்சின் மூத்த அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்து அவர்களை வரவேற்று பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.







சாதனை வீரர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு  சாதனை வீரர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு Reviewed by Editor on September 08, 2021 Rating: 5