இலங்கை உதைபந்தாட்டச் சங்க (FFSL) தலைவர், ஜெஸ்பர் உமரை, AFC தலைவர் (Asian Football Confederation) ஷேக் சல்மான் பின் கலீஃபா இன்று (29) புதன்கிழமை பஹ்ரைனில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ வாசஸ்தலத்திற்கு அழைத்திருந்தார்.
இலங்கை உதைபந்தாட்டச் சங்க தலைவர் இலங்கை கால்பந்துக்கான முன்னோக்கி மற்றும் அவரது புதிய பார்வை பற்றி சுருக்கமாக விளக்கினார். AFC தலைவர் குறுகிய கால மற்றும் நீண்ட கால முன்னேற்றங்களுக்கு இலங்கை கால்பந்துக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக இதன் போது தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களும் கால்பந்தின் ஆசிய மற்றும் பிராந்திய முன்னேற்றம் தொடர்பான பல விடயங்கள் பற்றி விவாதித்ததோடு, இந்த உத்தியோகபூர்வ வருகையை குறிப்பிடுவதற்காக AFC தலைவரும் FFSL தலைவரும் நினைவுச்சின்னத்தை பரிமாறிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.