(றிஸ்வான் சாலிஹு)
தலைமை பொலிஸ் பரிசோதகராக (CI) குற்றப்புலனாய்வு பிரிவின் தலைமைக் காரியாலயத்தில் கடமையாற்றி வந்த பாலமுனையைச் சேர்ந்த எம்.கே.இப்னு அஸார் இன்று (08) வெள்ளிக்கிழமை முதல் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கமைவாக இந்த பதவி உயர் வழங்கப்பட்டுள்ளதோடு, இவர் இதற்கு முதல் அக்கரைப்பற்று, பொத்துவில் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையங்களில் நிலையப் பொறுப்பதிகாரியாக (OIC) கடமையாற்றியுள்ளார்.
இவர் ஓய்வு பெற்ற தபால் உத்தியோகத்தர் யூ.எல்.மஃமூது கான், மர்ஹூமா ஐ.எல்.கதீஜா உம்மா ஆகியோரின் புதல்வராவார். இவர் தனது கல்வியை பாலமுனை அல்- ஹிதாயா பாடசாலை, அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி மற்றும் ஒலுவில் அல்- ஹம்றா தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார்.
இவரின் இந்த பதவியுயர்வு பாலமுனை மண்ணுக்கு பெரும் மதிப்பையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.