(றிஸ்வான் சாலிஹூ)
"சமுர்த்தி அருணலு வாழ்வதார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ்" கற்றாழை பயிர் செய்கை அறுவடை செய்த பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (18) திங்கட்கிழமை தமண பிரதேச செயலகத்தில் செயற்திட்ட பணிப்பாளர் அலியார் ஆஸாத் தலைமையில் இடம்பெற்றது.
நிழ்வில் பிரதம அதிதியாக சமுர்த்தி ராஜாங்க அமைச்சர் கெளரவ சிஹான் சேம சிங்க அவர்களும், விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டீ.வீரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஷ, அரசாங்க அதிபர் திரு.பண்டாரநாயக்க, சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் ஜனாப்.சப்றாஸ் மற்றும் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கற்றாழை உற்பத்தி பயனாளிகளுக்கு அவர்களின் அறுவடைக்கான காசோலைகள் அதிதிகளினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.