நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31) அதிகாலை நீக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று (29) காலை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கூடிய கொவிட் செயலணியிலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதோடு, இன்னும் முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுக்கப்பட்டது.
எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில்,
1.மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படுவது.
2. பொது இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம்.
3.உயர்தரம் மற்றும் சாதாரணத்தர வகுப்புகளை ஆரம்பிக்கத் தீர்மானம்.
4.தற்போதை நிலைமையை நிர்வகிப்பதற்கு மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம்.
5.சுற்றுலாத்துறை கைத்தொழிலை இழக்குவைத்து பல தீர்மானங்கள் எடுத்தல்.
6.மக்களிடத்தில் தடுப்பூசி பயத்தை ஏற்படுத்தும் குழுக்கள் தொடர்பில் ஆராயுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.