(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் சீருடை அறிமுக நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஸமீலுல் இலாஹி அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை (18) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம். அன்சார் அவர்கள் நிகழ்வில் சீருடை அறிமுகத்தை ஆரம்பித்து வைத்து கழக உறுப்பினர்களுக்கான சீருடையை தனது கரங்களினால் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். ஏ.எம்.தமீம் அவர்களும், விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலி அவர்களும், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. றுமைஸா, அக்கரைப்பற்று பிரதேச சம்மேளனத் தலைவர் எம்.எம். றுக்சான் மற்றும் இளைஞர் கழகங்களின் சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.