100 பௌத்த பிக்குகளுடன் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இன்று (20) புதன்கிழமை காலை இந்தியா சென்றுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இந்தியாவின் குஷி நகர் விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விசேட விருந்தினர்களாக இலங்கையைச் சேரந்த இவர்கள் பங்குபற்ற சென்றுள்ளார்கள்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குஷி நகர் விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவை இதன் மூலம் ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
புதிய விமான நிலைய திறப்பு விழாவுக்கு சென்ற குழுவினர்
Reviewed by Editor
on
October 20, 2021
Rating: