ஆளுநர் அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளத்தை இடைநிறுத்த முடியாது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுசெயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
21 ம் திகதிக்கு கடமைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்தப்போவதாக வடமேல்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளதை கண்டித்துள்ள அவர் ஆளுநர் தனது கருத்தினை வாபஸ்பெறவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல அரசியல்வாதிகள் 21 ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்,21 ம் திகதி கடமைக்கு சமூகமளிக்காவிட்டால் சம்பளத்தினை இடை நிறுத்தப்போவதாக வடமேல்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார் என மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் மிகவும் பழமையான இடதுசாரி கட்சியின் தலைவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறித்து நான் கவலையடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பளத்தை ஆளுநரால் இடைநிறுத்த முடியாது -ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுசெயலாளர்
Reviewed by Editor
on
October 20, 2021
Rating: