இலங்கையின் கல்வி வரலாற்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக முதன் முறையாக அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று (06) புதன்கிழமை இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரையில் கல்வி அமைச்சின் ஊடாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முதல் முறையாக அதிபர் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை
Reviewed by Editor
on
October 06, 2021
Rating: