முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் மகன் தஹாம் சிறிசேன அரசியலில் உத்தியோகபூர்வமாகக் களமிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் அணியின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான கூட்டமொன்று மின்னேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தஹாம் சிறிசேன எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலில் குதிக்கும் மைத்திரியின் வாரிசு
Reviewed by Editor
on
October 19, 2021
Rating: