சன்றைஸ் இளைஞர் கழக வீரர், கரம் தனி தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவின் சன்றைஸ் இளைஞர் கழக வீரர், கரம் தனிப் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 33வது இளைஞர் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு மாவட்ட இளைஞர் விளையாட்டு போட்டி சனிக்கிழமை (30) அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்தவகையில், அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து இளைஞர் கழக வீரர்கள் கலந்து கொண்டதுடன், இறுதி தனிப் போட்டியில் அக்கரைப்பற்று மற்றும் கல்முனை பிரதேச செயலகங்களின் இளைஞர் கழகங்கள் பங்குபற்றின.

இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் சன்றைஸ் இளைஞர் கழகத்தினை சேர்ந்த எம்.எஸ்.எம். சுல்பிஹான் வெற்றி பெற்று, அடுத்தமாதம் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சன்றைஸ் இளைஞர் கழக வீரர் சுல்பிஹான் கரம் தனிப் போட்டியில் தேசிய மட்டப் போட்டிக்கு விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








சன்றைஸ் இளைஞர் கழக வீரர், கரம் தனி தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி சன்றைஸ் இளைஞர் கழக வீரர், கரம் தனி தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி Reviewed by Editor on October 31, 2021 Rating: 5