சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் மாட்டுப்பளை சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி வயற்காணிக்குள் சென்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (28) வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் பின் டயர் வெடித்ததில் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி வயலில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி வயற்காணிக்குள்
Reviewed by Admin Ceylon East
on
October 28, 2021
Rating: