ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கங்களின் அதிரடி அறிவிப்பு, மாற்று நடவடிக்கைக்கும் ஏற்பாடு

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் (வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) திங்கட்கிழமை நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதோடு, அரசாங்கத்திற்கு அச்சுறுத்தியோ, பலவந்தமாகவோ தங்களிடமிருந்து பாடசாலை திறப்புகளை வாங்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, அனைத்து அதிபர் ஆசிரியர்களும் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் பாடசாலைக்கு சமூகமளிக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இம்மாதம் 25ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் பாடசாலைக்கு அனைவரும் கடமைக்கு செல்லவும், மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரவும் தீர்மானித்துள்ளதாக பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.



ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கங்களின் அதிரடி அறிவிப்பு, மாற்று நடவடிக்கைக்கும் ஏற்பாடு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கங்களின் அதிரடி அறிவிப்பு, மாற்று நடவடிக்கைக்கும் ஏற்பாடு Reviewed by Editor on October 18, 2021 Rating: 5