நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனுக்கு பிணை

ஈஸ்டர் ஞாயிறு வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் (PTA) கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ரிஷாத் பதியுதீனுக்கு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று (14) வியாழக்கிழமை பிணை வழங்கியுள்ளது.

அத்தோடு, சிறுமி இஷாலியின் வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் அவர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனுக்கு பிணை நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனுக்கு பிணை Reviewed by Editor on October 14, 2021 Rating: 5