கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல்போயிருந்த பொலிஸ் அதிகாரியான எஸ். இளங்கோவன், சுமார் 51 நாட்களுக்கு பின்னர் இன்று (29) வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு நீர் வழங்கும் 40 அடி உயரமான நீர்த்தாங்கியில் இருந்தே அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பூண்டுலோயாவை வசிப்பிடமாகக் கொண்ட இந்த பொலிஸ் அதிகாரி, நெஞ்சுவலி காரணமாக செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் மறுநாள் முதல் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
காணாமல் போயிருந்த பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு
Reviewed by Editor
on
October 29, 2021
Rating: