(றிஸ்வான் சாலிஹு)
கிழக்கு மாகாண முன்பள்ளி பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான covid 19 விடுமுறைக்கான பயிற்சி வழிகாட்டல் நூல் வியாழக்கிழமை (07) வழங்கி வைக்கப்பட்டது.
முன்பள்ளி மாணவர்கள் covid 19 விடுமுறை காலங்களில் வீட்டில் இருந்தவாறு கற்கும் நோக்குடன் கல்வி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்ட இப்பயிற்சி புத்தகத்தினை அம்பாறை மாவட்ட முன்பள்ளி பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் அக்கரைப்பற்று வலய கள உத்தியோகத்தர் எஸ்.எல்.ஹபீல் அவர்களிடமிருந்து அந்நூர் முன்பள்ளி பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான " அன்புடன் " என்ற கைந்நூல் அந்நூர் முன்பள்ளி பாடசாலையின் தலைவர் ஏ.எல்.முஸாதீக் அவர்களிடம் வழங்கப்பட்டது.
அக்கரைப்பற்று வலயத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் துரிதமாக வழங்க முன்னின்ற முன்பள்ளி பாலர் பாடசாலை அக்கரைப்பற்று வலய கள உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் அந்நூர் முன்பள்ளி பாலர் பாடசாலை நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.