(றிஸ்வான் சாலிஹு)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிழக்கு மாகாண கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பக்கீர் பைத் கலைஞர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வும் அனுபவப் பகிர்வும் - 2021 நிகழ்வு சனிக்கிழமை (09) காலை 9.00 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஜனாப். ஏ.எல்.தௌபீக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி திருமதி நஹீஜா முசாபீர் அவர்களும், அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம். நழீல், கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல். ஜஹ்பர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.முகம்மது றிபாஸ், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் பக்கீர் பைத் கலைஞர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.