நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்ட புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர்

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி தற்போது உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதிவு உயர்வு பெற்றிருக்கும் திரு. தனஞ்சய பெரமுன அவர்கள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையால்  சனிக்கிழமை (09) பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கெளரவ ஏ.எம்.நௌபர் அவர்களினால், புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, பிரதேச சபை மற்றும் பிரதேச மக்கள் சார்பாக அவர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்ட புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்ட புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் Reviewed by Editor on October 10, 2021 Rating: 5