இந்திய உதவி உயர்ஸ்தானிர் DR.அதிரா செந்தில் தொண்டமானுடன் சந்திப்பு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானின் பதுளையில் உள்ள  உத்தியோகபூர்வ இல்லத்திற்கு  இந்திய உதவி உயர்ஸ்தானிர் DR.அதிரா மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின் போது இலங்கை இந்திய நாடுகளின் கலாச்சார  பொருளாதார வளர்ச்சி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் , மலையக மக்களுக்கு எதிர்காலத்தில் தேவையான வேலைத்திட்டங்கள் மேற்கொள்வது குறித்தும் கலந்துரைடாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர்  டி.வி சென்னன், மாகண சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும்  பிரதேச சபை தலைவர்கள்,உப தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.






இந்திய உதவி உயர்ஸ்தானிர் DR.அதிரா செந்தில் தொண்டமானுடன் சந்திப்பு இந்திய உதவி உயர்ஸ்தானிர் DR.அதிரா செந்தில் தொண்டமானுடன் சந்திப்பு Reviewed by Admin Ceylon East on October 27, 2021 Rating: 5