வெல்லவாய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் மீள் அறிவித்தல் வரும் வரை செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள தகப்பன் மற்றும் இரு பிள்ளைகள் மரணமானதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இது வரைக்கும் இந்த நீர்வீழ்ச்சியில் ஆறு பேர் மரணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நீர்வீழ்ச்சியில் பூரண பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் பின்னர் சுற்றுலா பயணிகள் இதனை தரிசிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதேச செயலாளர் சந்தன ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மூவரின் உயிரை பறித்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிப்பு
Reviewed by Editor
on
October 27, 2021
Rating: