எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 50 நாட்களுக்கு மூட தீர்மானம்

இன்று (15) முதல் 50 நாட்களுக்கு சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்புகளை நிர்வகிப்பது மிக முக்கியமானது என்பதாலேயே மேற்படி தீர்மானமானது எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது பெய்து வரும் கனமழையால் 50% க்கும் அதிகமான மின்சாரம் ஹைட்ரோ ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மின்சார உற்பத்திக்கு எரிபொருளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளதோடு, இந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 50 நாட்களுக்கு மூட தீர்மானம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 50 நாட்களுக்கு மூட தீர்மானம் Reviewed by Editor on November 15, 2021 Rating: 5