கிழக்கு மாகாணத்தில் உள்ள வலயங்களுக்கிடையிலான 2022ம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.
ஒரு வலயத்திலிருந்து இன்னுமொரு வலயத்திற்கு தனது விருப்பத்தின் பேரில் இடமாற்றம் பெற விரும்புகின்ற ஆசிரியர்கள் மற்றும் தமது வலயத்திற்கென வலய இடமாற்ற அதிகாரிகளினால் தீர்மானிக்கப்படுகின்ற அதிகூடிய சேவைக்காலத்தினை விட கடமை புரிகின்ற ஆசிரியர்கள், முதல் நியமன வலயத்தில் நியமனக்கடிதத்தின்படி கட்டாய சேவைக்காலத்தினைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் முதல் நியமனத்திலிருந்து 05 வருட கால சேவையை அவ்வலயத்தில் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து இடமாற்றத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படுள்ளதாக தெரிவித்துள்ளார்.
www.ep.gov.lk/en/depteduindex எனும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டுமெனவும் இவ்வாறு தயாரிக்கப்படாத விண்ணப்பங்களும், முடிவுத்திகதிக்கு பின்பு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.