அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் முயற்சியினால் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்களுக்கான நியமனம் இன்று (04) வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
கட்சியின் ஒலுவில் அமைப்பாளர் ஏ.ஜே.எம்.அஸ்ஹர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபின் இணைப்புச் செயலாளர் யூசுப் நியாஸ், அட்டாளைச்சேனை இணைப்பாளர் எஸ்.எம்.அறூஸ், அதிபர் அப்துல் ஜப்பார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் காரியால உத்தியோகத்தர்கள் ஜஸ்வத் இலாஹி, ஜவாஹிர் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இங்கு அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் கிராமங்களில் உள்ள ஆறு இளைஞர்களுக்கு முதல்கட்டமாக இந்நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் மிக விரைவில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபின் ஏற்பாட்டில் நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.