(இர்ஷாத் இமாம்டீன்)
தோப்பூர் 58 ஆஸாத் நகர் மக்களின் நீண்ட கால குடிநீர் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
58 ஆஸாத் நகர் மக்கள் குடிநீர் இன்மையால் மிக நீண்ட காலம் பல சொல்லொனா இன்னல்களை எதிர் கொண்டு வந்தனர்.கிணறுகளின் மூலம் கிடைக்கும் குடி நீரும் பாவணைக்கு உதவாததாக இருந்து வந்தது.இது தொடர்பில் இப் பிரதேச மக்கள் பல அரசியற் தலைமைகளிடமும் பல கோரிக்கைகள் முன்வைத்தும் தீர்வு கிடைக்கவில்லை.
இதனால் அப்பிரதேச மக்கள் நம்பிக்கையீனத்துடன் இருந்த வேளையிலேயே ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மகளிர் அமைப்பாளர் றைஷா மகறூப்பிடம் தங்களது பிரச்சினையை முன்வைத்தனர்.
மக்களின் பிரச்சினையை அறிந்த உடனேயே நடவடிக்கை மேற்கொண்ட மகளிர் அமைப்பாளர் றைஷா மகறூப் 58 ஆஸாத் நகர் மக்களுக்கான குடிநீர்த் தேவையை நிறைவு செய்து வைத்தார்.
58 ஆஸாத் நகர் மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்கான குழாய்கள் பொருத்தும் நடவடிக்கையில் நேற்று முன்தினம் (19) பொதுமக்களுடன் இணைந்து றைஷா மகறூப் அவர்களும் ஈடுபட்டார்.