சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழக இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட இரு அரசியல் பிரமுகர்கள்

அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான சுப்பர் சொனிக் பிரேமியர் லீக் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு வெள்ளிக்கிழமை (29) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.ஐ.எம். அஷ்ரப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சருமான கௌரவ எம்.சி.பைசல் காசிம் அவர்களும், முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் தேசகீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.அஸ்வத் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.









சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழக இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட இரு அரசியல் பிரமுகர்கள் சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழக இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட இரு அரசியல் பிரமுகர்கள் Reviewed by Admin Ceylon East on November 01, 2021 Rating: 5