(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இதுவரை கொவிட் தடுப்பூசி போடாத 2001.10.22 ற்கும் 2005.10.21 ற்கும் இடையில் பிறந்தவர்களுக்கான தடுப்பூசி (Pfizer) எதிர்வரும் வியாழக்கிழமை (11) காலை 9 மணிக்கு அக்கரைபற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் போடப்படும் என்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆளடையாளஅட்டையுடனும்,18வயதிற்கு கீழே உள்ளவர்கள் தங்களுடைய அடையாள அட்டை அல்லது பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலருடைய அடையாள அட்டையுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலரினையும் அழைத்து வரவேண்டும் என்று டாக்டர் காதர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வரிய சந்தர்ப்பத்தை தவற விடாமல் பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.