அதிபர் - ஆசிரியர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தின் மூலம் தீர்வு காண முடிந்தது - மஹிந்த ஜயசிங்க

அதிபர், ஆசிரியர்கள் சம்பள குறித்து எதிர்வரும் வெள்ளிக் கிழமை வரவு செலவுத் திட்ட உரையின் போது நிதி அமைச்சர் ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பொறுமையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 வருடங்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த சம்பள முரண்பாடுகள் பிரச்சினைக்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 20 நாட்கள் நடத்திய போராட்டத் தின் மூலம் தீர்வு காண முடிந்தது என தாம் நம்புவதாக மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

நன்றி - தினக்குரல்



அதிபர் - ஆசிரியர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தின் மூலம் தீர்வு காண முடிந்தது - மஹிந்த ஜயசிங்க அதிபர் - ஆசிரியர்கள் இணைந்து  நடத்திய போராட்டத்தின் மூலம் தீர்வு காண முடிந்தது - மஹிந்த ஜயசிங்க Reviewed by Editor on November 10, 2021 Rating: 5