விவசாயிகளின் நன்மை கருதி தவிசாளர் றாசீகின் முயற்சியால் முகத்துவாரம் வெட்டப்பட்டது

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அதனை அண்டிய பிரதேச மூவின விவசாயிகளின் நன்மை கருதி அக்கரைப்பற்று முகத்துவாரம் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கெளரவ எம்.ஏ.றாசீக் அவர்களின் முயற்சியால் இன்று (10) புதன்கிழமை காலை வெட்டப்பட்டது.

இப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது சபை ஊழியர்களின் உதவியுடன், அக்கரைப்பற்று பிரதேச சபையின் கனரக வாகனத்தை (JCB)  கொண்டு, களத்தில் நின்று இப்பாரிய பணியை மக்களுக்காக தவிசாளர் றாசீக் செய்து முடித்தார்.

தவிசாளர் றாசீகின் மக்கள் பணியானது இப்பிரதேச மக்களுக்கு இன்றியமையாதொன்றாகும் என்பதோடு, தொடர்ச்சியாக இவ்வாறான சமூக சேவைகளை தொடர்ந்தும் இவர் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.











விவசாயிகளின் நன்மை கருதி தவிசாளர் றாசீகின் முயற்சியால் முகத்துவாரம் வெட்டப்பட்டது விவசாயிகளின் நன்மை கருதி தவிசாளர் றாசீகின் முயற்சியால் முகத்துவாரம் வெட்டப்பட்டது Reviewed by Editor on November 10, 2021 Rating: 5