அம்பாரை கச்சேரிக்கு முன்னால் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கக்கோரி இன்று (11)  செவ்வாய்க்காழமை அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்ப போராட்டம் இடம்பெற்றது.

அதிகரித்துள்ள விலைவாசியைக் கருத்திற்கொண்டு சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கக்கோரியே இந்த போராட்டம் இடம்பெற்றது. 

அரச ஊழியர்கள் கூட்டு தொழிற் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோர் பாதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டமை குறிப்பிடத்தக்கது.






அம்பாரை கச்சேரிக்கு முன்னால் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் அம்பாரை கச்சேரிக்கு முன்னால் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் Reviewed by Editor on November 11, 2021 Rating: 5