களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் இருந்து கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மஹிந்த சமரசிங்க 58,514 விருப்பு வாக்குகளைப் பெற்று 8 வது இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.
இவர் எம்.பியை இராஜினாமா செய்யும் பட்சத்தில் - அடுத்து அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்த லலித் வர்ணகுமார புதிய எம்பியாக தெரிவு செய்யப்படவுள்ளார். இவர் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள் 46,542.
மஹிந்த சமரசிங்க - அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோ நாட்டுக்கான , இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Boomudeen Malik)