அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டது

 (றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) "நிழல் தரும் மரங்கள் நடும்" செயற்திட்டத்தின் அடிப்படையில் ஐந்தாம் கட்ட நிழல் தரும் மரங்கள் நடுகை வைபவம் நேற்று (06) சனிக்கிழமை  பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இப்பாடசாலையில் 2002 - 2003ஆம் ஆண்டு க.பொ.தா உயர் தரம் கல்வி கற்ற ஏ.எல்.சிபான், ஜே.எச்.நப்லான், பீ.ஏ.சப்றீன், ஏ.எம்.எம்.காலீத், எம்.எச்.ஹசீம்,  சீ.எம்.நிம்ஸாட், பீ.சாஜீத், ஏ.எம்.நிறோஸா, எஸ். மஜீட் அல் கஃபாரி ஆகிய மாணவர்களின் முழு அனுசரனையுடன் நிதியுதவி வழங்கப்பட்டு  இத்திட்டம் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எஸ்.றிபாயுடீன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையிலும், கல்லூரியின் பிரதி அதிபர் யூ.எல்.ஏ.ஹக்கீம் அவர்களின் நெறிப்படுத்தலில் இத்திட்டம் இடம்பெற்று வருவதோடு, பாடசாலையின் பிரதி அதிபர் ஜனாப்.பஸீர், இத்திட்டத்திற்கு நிதியுதவியளித்த மாணவர்கள் மற்றும் அவர்கள் சார்பானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

இப்பாடசாலையில் செயற்படுத்தப்படும் இவ்வாறான நன்மையளிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தொடர்ச்சியாக பழைய மாணவர்கள் உதவி வரும் இச்சந்தர்ப்பத்தில், எதிர்காலத்திலும் இது போன்ற மர நடுகை செயற்பாட்டிற்கு பழைய மாணவர்கள் தங்களது முடியுமான உதவிகளை செய்து கொள்ளுமாறு பிரதி அதிபர் ஹக்கீம் மாணவர்களிடத்தில் வினயமாக கேட்டுக் கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டது அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் நிழல் தரும் மரங்கள்  நடப்பட்டது Reviewed by Editor on November 21, 2021 Rating: 5