அக்கரைப்பற்றில் கோலாகலமாக திறக்கப்படும் சர்வதேச பாடசாலை

(றிஸ்வான் சாலிஹு)

நவீன உலகின் கல்வி மாற்றத்திற்கமைவாக ஆங்கில மொழி மூலம் KG முதல் A/L வரையிலான கல்வி நடவடிக்கைகளை கிழக்கிழங்கையின் அக்கரைப்பற்று நகரில் ஆரம்பிக்கும்  AIMS சர்வதேச பாடசாலையின் மாபெரும் திறப்பு விழா எதிர்வரும் 15.11.2021 திங்கட்கிழமை காலை 9.00மணிக்கு இடம்பெறும்.

இம்மாபெரும் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும், கெளரவ அதிதியாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் கெளரவ ஏ.அஹமட் ஸகி அவர்களும், விசேட அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் (நழீமி), சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர்கள், அதிபர், உத்தியோகத்தர்கள் மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




அக்கரைப்பற்றில் கோலாகலமாக திறக்கப்படும் சர்வதேச பாடசாலை அக்கரைப்பற்றில் கோலாகலமாக திறக்கப்படும் சர்வதேச பாடசாலை Reviewed by Editor on November 13, 2021 Rating: 5