மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையின் ஆரோக்கிய வாழ்வு நிலைய கட்டிட திறப்பு விழாவும், ஆரம்ப சுகாதார பலப்படுத்தல் திட்டத்தின்(PSSP) பங்காளிகளுக்கான சுகாதார அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும், இன்று (13) சனிக்கிழமை மிக விமர்சையாக இடம்பெற்றது.
வைத்திய அதிகாரி டாக்டர். கார்த்திகா அரவிந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் சசிகுமார் அவர்களும், சுகாதார சேவைகள் பணிமனையின் டாக்டர் நவலோஜிதன், வைத்தியர்கள் ,ஊழியர்கள் உட்பட ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.