15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் இருக்கின்றன என்ற அறிவித்தலுக்கு பின்னர் நுவரெலியாவில் உள்ள ஒவ்வொரு பெற்றோல் அடிக்கும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது.
நாட்டில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டும் என அறிவிப்பின் பின் நுவரெலியாவில் உள்ள இடங்களில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இருப்பு இல்லை என்னும் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில பங்குகளில் மட்டுமே பெட்ரோல் இருப்பு உள்ளது.
இதையொட்டி அந்த பங்குகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் எரிபொருள் நிரப்பக் காத்திருக்கின்றன.
(செ.திவாகரன் - மலைநாடு)
பெட்ரோல் , டீசல் தட்டுப்பாடு - நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்
 
        Reviewed by Editor
        on 
        
November 15, 2021
 
        Rating: