அம்பாறை மாவட்டம் உட்பட மூன்றாவது தடுப்பூசி நாளை முதல்

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் 19 மூன்றாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை (17) புதன்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், அனுராதபுரம், அம்பாறை மாவட்டம் மற்றும் மேல், தென் மாகாணங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தடுப்பூசி ஏற்றி 03 மாதங்கள் முழுமை பெற்றவர்களுக்கே இவ்வாறு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

முதலாவது மற்றும் இரண்டாவதாக எவ்வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.



அம்பாறை மாவட்டம் உட்பட மூன்றாவது தடுப்பூசி நாளை முதல் அம்பாறை மாவட்டம் உட்பட மூன்றாவது தடுப்பூசி நாளை முதல் Reviewed by Editor on November 16, 2021 Rating: 5