மாணவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலையின் அனுசரனையுடன் பாடசாலை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (3) புதன்கிழமை கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில்  தரம் 01 தொடக்கம் 05ம் தர மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜிதிய்யா தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ ஆர்.எப் ரிப்சியா, சாய்ந்தமருது ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.என் சூஸான் ஆகியோருடன் வைத்தியசாலையின் பயிலுனர் வைத்தியர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டத்தை சிறப்பாக நடத்தினர்.






மாணவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் மாணவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் Reviewed by Admin Ceylon East on November 03, 2021 Rating: 5