அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு சாத்தியப்படாது - அமைச்சர் டலஸ்

அனைத்து அரசதுறை ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு விருப்பம் இருந்தாலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தச் சம்பள அதிகரிப்பு சாத்தியப்படாத விடயம் என நிதி அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அத்தோடு, அரச சேவையும் அரச ஊழியர்களும் நாட்டுக்கு சுமை என நிதியமைச்சர் கூறவில்லை. மாறாக, ஒவ்வொரு அரசாங்கமும் அமைச்சர்களும் தங்களுக்குத் தேவையான விதத்தில் அரசதுறையை நிரப்புவதால் ஏற்படும் பாதிப்பையே அவர் சுமையென சுட்டிக்காட்டினாரெனவும் அமைச்சர் குறிப் பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (16)
இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-

அரச சேவையாளர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் கூறவில்லை. அவர் அரச சேவையையும் அரச அதிகாரிகளையும் அவ்வாறு கூறவில்லை. குறிப்பாக, தற்போதைய அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து அரசாங்கமும் பாரிய தவறொன்றைச் செய்துள்ளன. அதன்படி, அரசில் தீர்மானமொன்றை எடுத்துக்கொண்டு தங்கள் வாக்குகளுக்காக அரச சேவை நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, எங்கள் அமைச்சின் கீழுள்ள ஒரு நிறுவனத் தில் 2016 ஆம் ஆண்டு சுயமாக ஓய்வு பெறும் முறையொன்றை முன்வைத்து 600 பேர் ஓய்வு பெற்றுச் சென்றனர். ஆனால், 2021 ஆம் ஆண்டு அதே 600 பேர் அமைச்சர்மார் அல்லது அரசாங்கத்தினால் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு அரசாங்கமும் அமைச்சர்களும் அரச சேவை
களை நிரப்புவதற்கு முன்னெடுக்கும் முயற்சிகளே இதற்குக் காரணம். இதனால் அரச நிறுவனங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சுமையையே நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். முற்றாக, அரச சேவை மற்றும் அரச அதிகாரிகள் நாட்டுக்கு சுமை என்றோ அவர் கூறவில்லை.
இதேவேளை, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள
முரண்பாட்டை தீர்ப்பதே இந்த வரவு - செலவுத் திட்டத்தினால் தீர்க்கப்பட வேண்டியிருந்த பாரிய பிரச்சினையாக இருந்தது. இது சம்பள உயர்வல்ல. 20 வருடங்களுக்கு மேலாக இருந்த சம்பள முரண்பாட் டையே தீர்ப்பதற்கு முன்மொழியப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவை சமாளிப்ப
தற்கு அனைத்து அரச மற்றும் தனியார் துறை யினருக்கும் சம்பள உயர்வை வழங்க முடிந்தால் அது சிறந்த விடயமாகும்.
ஆனால், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 24
வருடங்களாக காணப்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டி யிருந்தது.
ஆகவே, அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் சம்பள
அதிகரிப்பை வழங்குவதற்கு விருப்பம் இருந்தாலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு முடியாத விடயம் என்பதை கடந்த வாரத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் தெரிவித்தார் என்றார்.

நன்றி - தினக்குரல்



அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு சாத்தியப்படாது - அமைச்சர் டலஸ் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு சாத்தியப்படாது - அமைச்சர் டலஸ் Reviewed by Editor on November 18, 2021 Rating: 5