நாட்டை மீண்டும் முடக்க நேரிடலாம், ஜனாதிபதி தெரிவித்த காரணம்!!!

நாட்டில் தற்போது போராட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் ஏற் படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் நேற்று (10) புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு பேசுகையில்,

எதிர்க்கட்சியினர் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போராட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் ஏற் படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம்.

இதனால், பொதுமக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத் துக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் எதிர்க் கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.




நாட்டை மீண்டும் முடக்க நேரிடலாம், ஜனாதிபதி தெரிவித்த காரணம்!!! நாட்டை மீண்டும் முடக்க நேரிடலாம், ஜனாதிபதி தெரிவித்த காரணம்!!! Reviewed by Editor on November 11, 2021 Rating: 5